ஏப்ரல் 5 முதல் மதுரை சித்திரை திருவிழா துவக்கம் – 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி!
உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கொண்டாட்டம் வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட தடையையடுத்து சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டுமாக பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழா:
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் மதுரை சித்திரைத் திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 5ம் தேதியன்று துவங்க இருக்கிறது. இந்த சித்திரைத் திருவிழா உலகப்புகழ் பெற்ற ஒரு நிகழ்வாக கருதப்படுவதால், இப்பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருகை தருவது வழக்கம். இந்த சித்திரைத் திருவிழா கொண்டாட்டமானது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் என இரண்டு கோயில்களிலும் நடைபெறுவது உண்டு.
கொரோனா பணியாளர்களுக்கான நிலுவை சம்பளம் எப்போது? வட்டார அலுவலர் தகவல்!
அந்த வகையில் 2022ம் ஆண்டில் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருக்கும் நிலையில், சுமார் 2 ஆண்டுகள் கழித்து இந்த விழாவிலே கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வந்த கொரோனா பேரலைத்தொற்று நிமித்தம் மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியனின் புதிய அவதாரம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
ஆனால் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், வழக்கம் போல மதுரை சித்திரை திருவிழாவை பக்தர்களுடன் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் பக்தர்கள் எக்கச்சக்க சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர். இப்போது இந்த ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழாவில் புகழ்பெற்ற நிகழ்வுகளான சித்திரை திருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 5 மற்றும் கள்ளழகர் திருமலை ஏறுதல் நிகழ்வு ஏப்ரல் 19 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.