டிசம்பர் 30 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை! ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

0
டிசம்பர் 30 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் - அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை! ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
டிசம்பர் 30 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் - அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை! ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
டிசம்பர் 30 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை! ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!

கர்நாடகாவில் ஓமைக்ரான் தொற்று தாக்கத்தின் காரணமாக மருத்துவ நிபுணர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த அரசிற்கு பரிந்துரைத்துள்ளனர்.

இரவு ஊரடங்கு:

கர்நாடகா மாநிலத்தில் நாட்டிலேயே முதல் ஓமைக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டது. அப்போது முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாக நோய் தடுப்பு விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் வர இருக்கின்றது. அப்போது தொடர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதால் மக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அந்த சமயத்தில் முறையாக கடைபிடிக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் நோய்த்தொற்று அதிகமாக பரவி விடும் என்பதால் டிசம்பர் 15ம் தேதியான நேற்று மாநிலத்தின் நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோசனை நடத்தியது.

முடிவுக்கு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (டிஏசி) உறுப்பினர்கள், “2022 புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களைக் குறைக்க பரிந்துரைக்கிறது. தற்போதைய தினசரி அறிக்கை 300 என்ற அளவில் உள்ளது. இதன் விளைவாக, தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தனது அறிக்கையில் பல செயல்பாடுகளை தடை செய்ய பரிந்துரைத்தது. அதில், புத்தாண்டு கொண்டாட்டங்களை அரங்குகள் வாடகைக்கு விடப்பட்ட இடங்களில் பெரிய அல்லது சிறிய அளவிலான கொண்டாட்டங்கள் உட்பட பப்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் இது போன்ற நிறுவனங்களில் சிறப்பு நிகழ்வுகள், ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் மற்றும் முக்கிய சாலைகள், மால்கள் மற்றும் பிற பொது இடங்களில் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டிச.18-ஆம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஆனால் “பப்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் நிறுவனங்களில் வழக்கமான நடவடிக்கைகள் மற்றும் வணிகம் தொடரலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்ச் ஸ்ட்ரீட், எம்ஜி ரோடு, பிரிகேட் ரோடு மற்றும் இணையான சாலைகள் ஆகிய பகுதிகளில் ஒன்று கூடுவதை தடை செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில், தடைகளை விதிக்க 144 பிரிவு அமல்படுத்தப்படும் என்றும், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் தொற்றுநோய்கள் சட்டம் விதிக்கப்படும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர். பெங்களூரு மற்றும் பிற நகரங்களில் டிசம்பர் 30, 2021 முதல் ஜனவரி 2, 2022 வரை இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை வீடுகளில் நடத்தவும், முடிந்தவரை பொதுக் கொண்டாட்டங்களைத் தவிர்க்கவும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு வரும்போது, தற்போதுள்ள கோவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றுவது மட்டுமல்லாமல், டிசம்பர் 22 முதல் ஜனவரி 2 வரை வழிபாட்டுத் தலங்களில் 50% இருக்க வேண்டும். மூடப்பட்டுள்ள அரங்கு போன்ற இடங்களில் மக்கள் 20 நிமிடங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த காலகட்டத்தில் சிறப்பு சேவைகள் மற்றும் விழாக்களை தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!