முடிவுக்கு வரும் ‘செம்பருத்தி’ ஷபானா, ஆர்யன் திருமணம்? இணையத்தில் கசிந்த தகவல்! ரசிகர்கள் ஷாக்!
கடந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை சீரியல் நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யன் இருவருக்கும் இடையே தற்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதளங்களில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நடிகை திருமணம்
பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் தான் சின்னத்திரை சீரியல் நடிகை ஷபானா மற்றும் ஆர்யன் இருவரது திருமணமும் நடைபெற்றது. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. எந்தவித முன்னறிவிப்புகளும் இல்லாமல் திடீரென நடைபெற்ற இந்த திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.
ஐஸ்வர்யாவை புகழ்ந்து பேசும் தனம், கடுப்பில் இருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
அதே போல நடிகை ஷபானா மற்றும் ஆர்யனின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலானது. என்றாலும் இந்த திடீர் திருமணம் ரசிகர்களால் சந்தேகத்திற்குரியதாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் இரு வேறு மதத்தை சேர்ந்தவர்களின் இந்த திருமணம் அவர்களின் பெற்றோரால் அங்கீகரிக்கப்படவில்லை என்பது தான். முதலில் நடிகை ஷபானா மற்றும் நடிகர் ஆர்யனின் திருமணத்தில், ஷபானாவின் வீட்டாருக்கு சம்மதம் இல்லையென்றும், இதனால் ஷபானாவின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் இத்திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
அதே போல நடிகர் ஆர்யன் தரப்பில் இருந்தும் இந்த திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லையாம். இது தவிர நடிகை ஷபானாவின் தோழியும் சின்னத்திரை நடிகையுமான ரேஷ்மா தான் இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் கூறப்படுகிறது. என்றாலும் இந்த பிரச்சனை ஷபானா, ஆர்யனின் திருமண வாழ்க்கையிலும் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. அந்த வகையில் திருமணம் முடித்த கையோடு 4 நாட்கள் பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றுக்கு தென் நிலவு சென்றிருந்த ஷபானா, ஆர்யன் ஜோடி எதோ பிரச்சனை காரணமாக அடுத்த நாளே அங்கிருந்து கிளம்பி இருக்கிறது.
விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சிவகாமி வீட்டில் நடந்த சோகம் – தந்தை மரணம்! ரசிகர்கள் இரங்கல்!
இது தவிர திருமணம் முடித்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் ஷபானா, இன்னும் ஆர்யனின் வீட்டுக்கு கூட செல்லவில்லையாம். இதற்கிடையில் ஷபானா மற்றும் ஆர்யனின் குடும்பத்தாருக்கும் இடையே பல பிரச்சனைகள் போய் கொண்டிருக்கிறது. இப்போது, நடிகர் ஆர்யனின் குடும்பத்தார், அவருக்கு பெண் பார்த்திருப்பதாகவும், அதனால் ஷபானா அவரது வாழ்க்கையை விட்டு விலக வேண்டும் என்று கூறி வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி இருக்க நடிகை ஷபானா சமீபத்தில் வெளியிட்டிருந்த ஒரு இன்ஸ்டா ஸ்டோரி பதிவும், இவர்களுக்கு இடையே பிரச்சனை இருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. இதனால் திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே கடந்த நிலையில், ஷபானா மற்றும் ஆர்யன் இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மத்தியில் ஆர்யன், ஷபானா இருவரும் இந்த வதந்திகள் குறித்த விளக்கங்களை கொடுப்பார்கள் என மொத்த சின்னத்திரை ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.