இன்று முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
இன்று முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இன்று முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இன்று முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரமடைந்து வருவதையடுத்து திருப்பூர் மாவட்டத்திலும் கடைகளின் இயக்க நேரத்தை மாலை 5 மணியாக குறைத்தும், பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கடைகள் திறப்பு:

கடந்த சில நாட்களாக கொரோனா 2 ஆம் அலை புதிய பாதிப்புகள் 2 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், மீண்டுமாக கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பலவகையான செயல்பாடுகளுக்கு நேர கட்டுப்பாடுகளுடன், சிலவற்றிற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்பொழுது திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்று (ஆகஸ்ட் 5) முதல் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tokyo Olympics 2020 Hockey – ஆண்கள் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி!

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் கீழ், பால் மற்றும் மருந்து கடைகள் தவிர மளிகை, காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்டவைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் சில முக்கிய பகுதியில் இயங்கி வரும் 33 வணிக பகுதிகள், பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் உள்ள 13 வணிக பகுதிகளில் பால், காய்கறி, மளிகை இறைச்சி, கோழி, மீன் கடைகள் தவிர மற்ற அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். டாஸ்மாக் கடைகள் தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

சரவணனன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

ஞாயிற்றுக்கிழமைகளில் பூங்காக்களில் பொதுமக்கள் வருகை தடை செய்யப்படுகிறது. வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் வார இறுதி நாட்களில் மூடப்படும். வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் பார்சல் சேவைகளுக்கு அனுமதி. மற்ற உணவகங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் உணவருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பார்சல் சேவைகளை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மேற்கொள்ளலாம். மேலும் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!