சரவணனன் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்யும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா சரவணன் பிரச்சனை பற்றி தனது கணவரிடம் சொல்லி கவலைப்படுகிறார். சந்தியா எவ்வளவோ முயற்சி செய்தும் சரவணன் முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறார். பின்னர் பார்வதி காலேஜ் செல்ல அவருக்கு புத்திமதி சொல்லி அனுப்புகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் சந்தியா சரவணன் பிரச்சனை பற்றி சிவகாமி தனது கணவரிடம் பேசுகிறார். சந்தியாவிடம் சரவணனை சரி செய்ய சொன்னதாக சொல்கிறார். ஏன் சந்தியாவிடம் இது பற்றி பேசுன அவங்களே அவர்கள் பிரச்சனையை சரி செய்து கொள்ளட்டும் என சிவகாமி கணவர் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் எல்லாத்துக்கும் சந்தியாவை குறை சொல்ல கூடாது அவளுக்கு இந்த வீட்டில் மருமகள் என்று எந்த மரியாதையும் இல்லை என சொல்கிறார்.
சிவகாமி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்தால் எல்லா பிரச்சனையும் சரியாகி விடும் என தெரிவிக்கிறார். சந்தியா சரவணனை வழியில் பார்த்து அவருக்கு என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அப்போது சரவணன் மீண்டும் புறக்கணிப்பது போல பேசி அங்கிருந்து கிளம்புகிறார். சந்தியா என்ன நடந்தது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளார்.
பின்னர் குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அர்ச்சனா அங்கே பைகளை எடுத்து வருகிறார். இது என்ன என்று சிவகாமி கேள்வி கேட்க மார்க்கெட்டில் கொண்டு போய் விற்க போவதாக சமாளித்து அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். பின்னர் பார்வதி பிரண்ட் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்ப சிவகாமி அவருக்கு அட்வைஸ் செய்கிறார்.
அதன் பின்னர் அர்ச்சனா பாஸ்கரை சந்திக்க செல்ல ஆட்டோவிற்கு காத்துக் கொண்டிருக்கிறார். பார்வதியும் அங்கே வந்து இரண்டு பேரும் ஒரே இடத்திற்கு செல்ல ஆட்டோ கேட்கின்றனர். பார்வதி, அர்ச்சனாவை ஆட்டோவில் ஏற சொல்லிவிட்டு பின்னாடி வேறு ஒரு ஆட்டோவில் புறப்படுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!