கேரளாவில் இருந்து தமிழகம் வர ‘இது’ கட்டாயம் – இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்!

0
கேரளாவில் இருந்து தமிழகம் வர 'இது' கட்டாயம் - இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்!
கேரளாவில் இருந்து தமிழகம் வர 'இது' கட்டாயம் - இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்!
கேரளாவில் இருந்து தமிழகம் வர ‘இது’ கட்டாயம் – இன்று முதல் புதிய விதிமுறைகள் அமல்!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள காரணத்தால் அந்த மாநிலத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நேரத்தில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோவை, திருப்பூர், சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இதனால் பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவின் படி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள், வணிக வளாகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோரை மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமில்லாமல் ஆகஸ்ட் 5 (இன்று) முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் சூழலின் அடிப்படையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள், பரிசோதனை நடவடிக்கைகள், நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வழிமுறைகள், சிகிச்சை மற்றும் வீட்டுக்கு அனுப்புவதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு மாற்றி அமைத்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று முதல் தமிழகம் வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் இல்லாதவர்கள் தமிழகத்திற்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!