தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் ( அக். 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பொதுமக்கள் நிம்மதியாக தீபாவளியை கொண்டாட தீபாவளிக்கு மறுநாள் (அக். 25) புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
தீபாவளி பண்டிகை வருகிற அக். 24 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கடந்த ஒரு வாரமாக கடைத்தெருவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் புது துணி வாங்கவும், பட்டாசுகளை வாங்கவும், கடைகளில் குவிந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக இருக்கிறது. அதனால் மக்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட நகரங்களில் நேற்றே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வகையில் தீபாவளிக்கு மறுநாள் (அக். 25) செவ்வாய்க்கிழமை வேலைநாள் என்பதால், தீபாவளிக்கு வெளி ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்புவது கடினம். அதனால் புதுச்சேரி அரசு தீபாவளிக்கு மறுநாள் ( அக். 25) பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு அலர்ட்.. 22 மாவட்டங்களில் கொட்ட போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்திலும் தீபாவளிக்கு அடுத்த நாள் (அக். 25) விடுமுறை விட வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால் இது குறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மேலும் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இன்றே கிளம்பி வருகின்றனர். அதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது.