ஆகஸ்ட் 31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று 2வது அலை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டன. இதனை கட்டுப்படுத்த மாநில வாரியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டன. இதனால் தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 40 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே அமலில் உள்ள ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தில் ரூ.100க்கு கீழ் குறைந்த பெட்ரோல் விலை – இன்று முதல் அமல்!
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகளின்படி திரையரங்குகள், கலாச்சார நடவடிக்கைகளுக்காக 50% க்கும் அதிகமான இருக்கை திறனுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரங்கங்கள் மற்றும் நீச்சல் குளங்கள் செயல்படலாம். முன்பு இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மற்றும் பார்கள் உட்பட அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்கள், இப்போது இரவு 10.30 மணி வரை செயல்படலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அவசர நடவடிக்கைகளைத் தவிர வெளிப்புற நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள், சட்டம் ஒழுங்கு, விவசாய பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற அவசர சேவைகள் தவிர இரவு ஊரடங்கில் மக்கள் மற்றும் வாகனங்களின் நடமாட்டம் உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் கண்டிப்பாக தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் (ஆகஸ்ட் 15) அமலுக்கு வருகிறது.