பாக்கியா நிலைமையை புரிந்துக் கொள்ளாத குடும்பத்தினர், வேதனையுடன் வேலை செய்யும் பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” சீரியல்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு காலில் அடிபட்டதை பற்றி வீட்டில் இருப்பவர்கள் யாருமே கவலைப்படவில்லை. பாக்கியாவின் நிலைமையை புரிந்துக் கொள்ளாமல் வேலைபார்க்க சொல்கின்றனர்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிற்கு காலில் அடிபட்டதால் வேலை செய்ய சிரமம்படுகிறார். ஆனால் அதை பற்றி வீட்டில் இருக்கும் யாரும் கவலைப்படாமல் வேலை வாங்குகின்றனர். பாக்கியாவை கோலம்போட சொல்ல ஜெனி கோலம் போட போகிறார். ஜெனி போட்ட கோலத்தை பார்த்து பாட்டி கிண்டல் செய்கின்றனர். ஒரு வேலையும் பார்க்க தெரியாத என பாட்டி ஜெனியை திட்டுகிறார்.
காலை சாப்பாடு செய்ய சொல்ல ஜெனி கடையில் வாங்கி கொள்ளலாம் என்று சொல்கின்றனர். ஆனால் கோபி கடையில் வாங்க சம்மதிக்கவில்லை. பாக்கியா கஷ்டப்பட்டு சாப்பாடு செய்கிறார். ஜெனி வீட்டில் இருப்பவர்கள் உங்கள் வலியை கூட புரிந்துக் கொள்ளமாட்டேங்குறாங்க என்று கவலைப்படுகிறார். அனைவரும் அமர்ந்து சாப்பிட அவ்வளவு கஷ்டப்பட்டு சமைத்தாலும் ஜூஸ் செய்யவில்லை என குறை சொல்கின்றனர்.
தமிழ்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,933 பேருக்கு கொரோனா – 21 மாவட்டங்களில் புதிய பலி இல்லை!
கோபி, இந்த வீட்டில் பாக்கியாவிற்கு என்ன குறை லோன் கட்ட வேண்டுமா எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும் என பாக்கியாவை திட்டுகிறார். பின்னர் பாக்கியா வீட்டில் இருப்பவர்கள் தன்னை புரிந்துக் கொள்ளவே என நினைத்துக் கொண்டு இரவு தூங்க முடியாமல் தவிக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் நடந்துக் கொண்டது பற்றியும், மருத்துவர் சொன்னது பற்றியும் நினைத்து வருத்தப்படுகிறார். காலையில் எழுந்து கஷ்டப்பட்டு சென்று வேலைகளை செய்து முடியாமல் அப்படியே உக்கருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!