பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு கிடுக்கிப்பிடி போட்ட நீதிமன்றம் – அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடினை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தற்போது புதிய உத்தரவு ஒன்று வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாடு:
தமிழகத்தில் சிறிது காலத்திற்கு முன்னர் வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு என்று எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து சுற்றுசூழல் மாசுப்பட தொடங்கியது. மிகவும் குறைவான காலம் மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பயன்பாட்டிற்கு பிறகு அவை மக்குவதற்கு ஆகும் காலம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
Exams Daily Mobile App Download
இதனால் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் அரசு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாட்டில்கள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும், கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் இந்த பிளாஸ்டிக் பொருட்களால் அதிக பாதிப்பு ஏற்படும்.
SBI வங்கியின் புதிய தொடர்பு எண்கள் அறிமுகம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!
Follow our Instagram for more Latest Updates
எனவே அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களை திரும்ப பெறும் மையம் அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதற்கான அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அப்பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.