தமிழகத்தில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து? முதல்வர் முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்துவது குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அதிகரித்து வந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் குறிப்பாக கடந்த 6 ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதே போல் கர்நாடக மாநிலத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் வணிகர்கள் வார இறுதி நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்தனர். அதன்படி கர்நாடக மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்திலும் தொற்று பரவல் குறைந்து வருவதால் வணிகர்கள் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
TN TRB தேர்வு கல்வித்தகுதி, மொத்த காலிப்பணியிடங்கள் & விண்ணப்பிக்கும் முறை – முழு விவரம் இதோ!
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31ம் தேதி அன்று முடிவுக்கு வருகிறது. அதனால் மருத்துவ நிபுணர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதா? அல்லது தளர்த்துவதா? என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். அத்துடன் தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.