TN TRB தேர்வு கல்வித்தகுதி, மொத்த காலிப்பணியிடங்கள் & விண்ணப்பிக்கும் முறை – முழு விவரம் இதோ!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடப்பாண்டில் 7000 க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்ப உள்ளது. இதையடுத்து இத்தேர்வை எழுதுவதற்கான தகுதி மற்றும் விண்ணப்ப முறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
TET தேர்வு
தமிழகத்தில் அரசு ஆசிரியர் பணிகளுக்கு ஆசிரியர் தேர்வாணையத்தால் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி வழங்கப்படும். தமிழகத்தில் ஏராளமானோர் கல்வியியல் பட்டம் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்து வந்தது.
2022 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள 7000 க்கும் அதிகமான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. 3,902 இடைநிலை ஆசிரியர்கள் 1,087 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 4,989 பணியிடங்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து SCERT 167 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு ஜூன் இரண்டாவது வாரத்தில் நடைபெறும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,334 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 493 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வானது, இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் D.T.Ed கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் தாள் B.Ed கல்வி தகுதி பெற்றவர்கள் எழுதக்கூடாது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுகலை பட்டமும், B.Ed-ம் முடித்திருக்க வேண்டும்.அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியர் NET/ SLET/ SET / SLST / CSIR / JRF தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அரசு பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் தேர்வு எழுத்தவுள்ளோர் Ph.D முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.