தமிழகத்தில் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு – அமைச்சர் பேட்டி!
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி இருக்கும் மண்ணெண்ணெய் அளவை குறைந்துள்ள நிலையில் அது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.
மண்ணெண்ணெய் அளவு
மத்திய அரசு நாட்டில் மண்ணெண்ணெய் அளவை குறைக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக 9000 கிலோ லிட்டருக்கு மேல் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 2,012 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது
TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இரட்டிப்பாகும் ஊதியம்.. நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
இது குறித்து மத்திய அரசுக்கு 2 முறை கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால் அரசு அது குறித்து கருத்தில் கொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு 7,510 கிலோ லிட்டர் இருந்த மண்ணெண்ணெய் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4000கி.லி என குறைக்கப்பட்டது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download