அடுத்து வர இருக்கும் மிகப்பெரிய அறிவிப்பு? கலைஞர் டிவியின் சஸ்பென்ஸ்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!
தமிழ்நாட்டின் பிரபல சேனல்கள் அனைத்தும் ரசிகர்களை தங்கள் வசம் இழுத்துக் கொள்ள அவ்வப்போது புது புது நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை தங்கள் சேனலில் ஒளிபரப்பி வருவார்கள். அந்த வகையில், தற்போது கலைஞர் டிவி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு:
சின்னத்திரை சேனல்கள் அனைத்தும் தங்களின் தனித்துவமான நிகழ்ச்சிகளின் மூலமாக ராசைகள் தங்கள் வசம் இழுத்து வருகின்றனர். ரசிகர்களுக்கு பிடித்தமாதிரியான, அதிகம் விரும்பக்கூடிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அதிக பார்வையாளர்கள் மூலம் டிஆர்பி ரேட்டிங்கை பெறவும் முயற்சிகள் நடந்து வருவது சகஜமான செயல் தான். அதிக ரசிகர்களை பெற்ற விஜய் டிவி மற்றும் சன்டிவி போன்ற சேனல்கள் தான் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்து வரும். இவர்களின் வரிசையில், கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் சேனலும் இணைந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – நாளை (டிச.07) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
மேலும், முக்கிய பண்டிகை நாட்களில் உச்ச நடிகர்கள் நடித்து பெரிய வெற்றியை அடைந்த பிரபலமான திரைப்படங்களை ஒளிபரப்புவதில் அனைத்து சேனல்களுக்கும் இடையில் பெரிய போட்டியே நடக்கும். இதனால் பெரிய படங்களின் சாட்டிலைட் உரிமையை எந்த நிறுவனம் பெறப்போகிறது என்று ரசிகர்களும் மிகவும் ஆவலாக எதிர்பார்ப்பார்கள். அப்படி பெரிய படங்களை சேனலில் ஒளிபரப்ப இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விளம்பரங்களும் அதிக அளவில் குவியும். அந்த வகையில், தற்போது கலைஞர் தொலைக்காட்சி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
TNUSRB PC போலீஸ் விசாரணை நடைமுறை – தமிழகம் முழுவதும் தொடங்கியது..!
அந்த அறிவிப்பு போஸ்டர் வடிவத்தில் உள்ளது. அதன் பின்னணியில், நீதிமன்றத்தின் படமும், செய்தி தாள்களும் பறப்பது போல் உள்ளது. இதனால் சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளி வந்து அதிக பாராட்டுகளையும், அதிக விமர்சனங்களையும் பெற்று தமிழ் சினிமா மற்றும் தமிழக மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜெய் பீம் திரை படத்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்ப இருப்பதாக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.