TNUSRB PC போலீஸ் விசாரணை நடைமுறை – தமிழகம் முழுவதும் தொடங்கியது..!
தமிழகத்தில் TNUSRB தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட PC தேர்வுக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு போலீஸ் விசாரணை இந்த வாரத்தில் நடத்தும் விதமாக தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸ் விசாரணை:
தமிழகத்தில் காவல் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் TNUSRB தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு தெரிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNUSRB தேர்வு வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்ட சிறைக்காவலர், இரண்டாம்நிலை காவலர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணிகள் உள்ளிட்ட பணிகளுக்கு கடந்த ஆண்டு டிச.13ம் தேதி தமிழகத்தில் மட்டும் 37 மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்.19ம் தேதி வெளியிடப்பட்டது.
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.30 கடைசி நாள்!மிஸ் பண்ணாதீங்க!
அதனை தொடர்ந்து எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் கடந்த செப்.22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மேற்கூறிய உடற்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. தற்போது இறுதியாக 3,845 பேர் AR பதவிக்கும், 6,545 பேர் TSP பதவிக்கும், 129 பேர் Jail Wardan பதவிக்கும், 1,293 பேர் Fireman பதவிக்கும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
மாநிலம் முழுவதும் மீண்டுமாக முழு ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் எதிரொலி! வதந்திக்கு அரசு விளக்கம்!
இவ்வாறாக தேர்வு செய்யப்பட்ட 11,812 பேருக்கும் விரைவில் மருத்துவ பரிசோதனை மற்றும் போலீஸ் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி போலீஸ் விசாரணை டிச.6ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் மாவட்ட வாரியாக இன்று டிச.6ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதனால் தேர்வான அனைவரும் அதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மருத்துவ பரிசோதனையும் இந்த மாத இறுதிக்குள் நடக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.