இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கான விமான சேவைக்கு தடை – ஜூலை 15 வரை நீட்டிப்பு!
கொரோனா அச்சம் காரணமாக இந்திய உள்ளிட்ட 7 நாடுகளுக்கான விமான சேவைக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை விதித்த பிலிப்பைன்ஸ் அரசு தற்போது மேலும் 15 நாட்களுக்கு தடை உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமான போக்குவரத்து:
கொரோனா என்னும் கொடிய வகை உயிர்க்கொல்லி நோய் உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தங்கள் நாட்டு மக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கும் விதமாக அனைத்து நாட்டு அரசுகளும் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். அதன்படி பல உலக நாடுகள் பிற நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்துக்கு தற்காலிக தடை விதித்து வருகிறது. மேலும் தங்கள் நாட்டு மக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
2 சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தற்போது அந்த வகையில் பிலிப்பைன்ஸ் அரசு கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி பிற நாடுகளுக்கான விமான போக்குவரத்துக்கு தடை விதித்தது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதித்தது. இந்நிலையில் உலக நாடுகளில் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்று தனது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
5 வருடத்திற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் தகவல்!
இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிற நாட்டு பயணிகள் வருவதற்கு தடை காலத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் இருந்து பிலிப்பைன்ஸ் வரும் பயணிகள் தடை காலம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ம் தேதிக்கு வரை இந்தியா உள்ளிட்ட 7 நாடுகள் போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.