5 வருடத்திற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் தகவல்!

1
5 வருடத்திற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் - அமைச்சர் தகவல்!
5 வருடத்திற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் - அமைச்சர் தகவல்!
5 வருடத்திற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் உள்ள கோவில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுபவர்கள் இனி நிரந்த பணியில் அமர்த்தப்படுவார்கள் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

நிரந்தர பணி

கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு தளர்வுகளாக 4 மாவட்டங்களில் மட்டும் கோவில்களை திறக்க அரசு அனுமதித்துள்ள நிலையில், வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் உள்ள கோவில்களில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 19ம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு நீக்கம் – பிரிட்டன் அரசு!!

அதாவது தமிழகத்தில் உள்ள கோவில்களில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணி செய்து வருபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னதான பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் பனிநிரந்தரம் குறித்து பேசியுள்ளார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!

அப்போது, தமிழகத்தில் முந்தைய ஆட்சி காலத்தில் சுமார் 3,700 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துகள் மீட்கப்பட்டதாக அறிக்கை வெளியிட்ட முன்னாள் முதல்வர், அதற்கான பட்டியலை வெளியிட முடியுமா என்று கேள்வி கேட்ட அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றுபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும் என்று உறுதி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!