2 சிறப்பு ரயில்கள் நேரம் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
குருவாயூர் – சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் – மங்களூர் ஆகிய இரண்டு சிறப்பு ரயில்களின் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
சிறப்பு ரயில்கள்:
தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த இரு மாதங்களாக மக்கள் பயணங்களை தவித்தனர். அதனால் பயணிகள் ரயில்கள் மக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு காலத்தில் பயணம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இ – பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அதனால் ரயில் நிலையங்களில் மக்களின் வருகை குறைந்தது. அரசு ஊழியர்கள், களப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்களுக்காக மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டது. ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டதால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
5 வருடத்திற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் பணி நிரந்தரம் – அமைச்சர் தகவல்!
தற்போது கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்து வருகிறது. அதனால் ஊரடங்கில் கடந்த ஜூன் 14 முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவை பயணிகளின் வருகை மற்றும் பயணிகளின் வசதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு புறப்படும் மற்றும் வந்து சேரும் நேரங்கள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளது. மற்ற சிறப்பு ரயில்களை தொடர்ந்து குருவாயூர் – சென்னை எழும்பூர் மற்றும் சென்னை சென்ட்ரல் – மங்களூர் ஆகிய இரண்டு சிறப்பு ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? முதல்வர் முக்கிய ஆலோசனை!
அதன்படி குருவாயூர்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் நாகர்கோவிலுக்கு மாலை 6.55 மணிக்கும், வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு இரவு 7.37க்கும் நான்குநேரி ரயில் நிலையத்திற்கு இரவு 7.48 மணிக்கும் வந்து சேரும். மேலும் சென்னை சென்ட்ரல் – மங்களூர் சிறப்பு ரயில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு இரவு 22.43 மணிக்கும் வந்தடையும் இந்த நேர மாற்றம் வரும் ஜூலை 5ம் தேதி வரை தொடரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.