மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விரையுங்கள்..!
மத்திய நீர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Executive பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்ட அறிவிப்பில் Executive பதவிக்கு தற்போது மொத்தமாக 27 காலிப்பணியிடங்கள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் Information Technology / Computer Science / Computer Engineering போன்ற பாடப்பிரிவில் B.E / B.Tech /B.Sc போன்ற ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். அல்லது degree in Law முடித்திருக்கலாம்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.02.2022 அன்றைய தேதியின் அடிப்படையில் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
THDCIL விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.