தற்கொலைக்கு முயலும் வசுந்தரா, கவலையில் கார்த்தி – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

0
தற்கொலைக்கு முயலும் வசுந்தரா, கவலையில் கார்த்தி - இன்றைய
தற்கொலைக்கு முயலும் வசுந்தரா, கவலையில் கார்த்தி - இன்றைய "தமிழும் சரஸ்வதியும்" எபிசோட்!
தற்கொலைக்கு முயலும் வசுந்தரா, கவலையில் கார்த்தி – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று வசுந்தரா, கார்த்தி தனக்கு கிடைக்காத கோபத்தில் தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். அதே சமயம் சரஸ்வதி நன்றாக படிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழ் அவரை ஒரு கோச்சிங் சென்டரில் சேர்த்து விடுகிறார்.

“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்:

இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் வசுந்தரா கார்த்திக்கு பெண் பார்த்து இருப்பதாக கோதை கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இதனால் வீட்டிற்கு சென்றதும் நேராக தனது அறைக்கு சென்று கதவை லாக் செய்து விடுகிறார். இதனை பார்த்து விட்டு பதட்டமடையும் சந்திரகலா என்ன நடந்தது என்று கேட்கிறார். அதற்கு வசுந்தரா கோதை தன்னிடம் கூறிய அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு இதற்கு ஒரு வழியினை தான் கண்டுபிடிப்பேன் என்றும் அதனால் எந்த தவறான முடிவிற்கும் வர வேண்டாம் என்று வசுந்தரவிடம் கூறுகிறார். ஆனால், வசுந்தரா தனக்கு மேஜைக்கு அருகில் இருக்கும் கத்தியை வைத்து கையை அறுத்து கொள்கிறார்.

பாரதி கண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய சன் டிவி ரோஜா – டாப் 5 பட்டியல் வெளியீடு!

தமிழ் சரஸ்வதியை அழைத்து கொண்டு தனக்கு தெரிந்த ஒரு கோச்சிங் சென்டருக்கு அழைத்து செல்லுகிறார். அங்கு பலர் படித்திருப்பதாகவும், படித்த அனைவரும் தேர்வில் வெற்றி அடைந்து இருக்கின்றனர் என்று கூறுகிறார். இதனை கேட்டு மகிழ்ச்சி அடையும் சரஸ்வதிக்கு தானும் தேர்வில் வெற்றி அடைந்து விடுவோம் என்று நம்பிக்கை வருகிறது. பின்னர், அவருக்கு ஒரு தேர்வு வைக்கின்றனர். அதில் சரஸ்வதி அதிக மதிப்பெண் எடுத்து விடுகிறார். கோச்சிங் சென்டருக்கான பீஸை தமிழ் தான் கட்டி விடுவதாக கூறுகிறார். சரஸ்வதி மறுத்து விடுகிறார். தமிழ் இதனை கடனாக வைத்து கொள்வதாகவும், படித்து நன்றாக மதிப்பெண் எடுத்த பின் இந்த பணத்தினை திருப்பி கொடுத்தால் போதும் என்று கூறுகிறார்.

TN Job “FB  Group” Join Now

சந்திரகலா வசுந்தரா தற்கொலை முயற்சி செய்து கொண்டதும், பதட்டமடைந்து அவரை ஹாஸ்பிடலில் சேர்க்கிறார். பின்னர், கார்த்திக்கு போன் செய்து ஹாஸ்பிடல் வர சொல்லுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சி அடையும் கார்த்தி ஹாஸ்பிடல் வந்து பார்க்கும் போது வசுந்தரா அழுது கொண்டே இருக்கிறார். கார்த்தி என்ன நடந்ததும் என்று கேட்கும் போது சந்திரகலா மற்றும் வசுந்தரா இருவரும் நடந்த விஷயங்களை எடுத்து கூறுகின்றனர். இதனை கேட்டு கார்த்தி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். சந்திரகலா இனி தனது பெண் நன்றாக இருக்க வேண்டும் என்று சீக்கிரமாக தானே திருமணத்தினை நடத்த இருப்பதாகவும் கூறி விடுகிறார். இதனால் கார்த்தி மிகவும் வருத்தம் கொள்ளுகிறார். அவரை பார்த்து விட்டு வசுந்தரா அவருக்காக பேசுகிறார். ஆனால், சந்திரகலா தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!