‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய தாமரையின் உருக்கமான வீடியோ – பாசம் எல்லாம் நடிப்பா!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து நேற்று வெளியேறிய தாமரை செல்வி, தற்போது ஜக்கி பெர்ரி உடன் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 5:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் தான் தாமரை செல்வி. இவர் 22 வருசமாக நாடக துறையில் இருக்கிறார். ஊர் ஊராக சென்று நாடகம் நடத்தும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சென்ற அவர் தற்போது தமிழக மக்களிடம் பிரபலமாகி இருக்கிறார். அவருடைய நேர்மையும், பாசமான குணமும் மட்டுமே இறுதி வாரம் வரை அவர் வருவதற்கு காரணமாக இருந்தது.
தனது மகனின் புகைப்படத்தை பதிவிட்ட ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா – ரசிகர்கள் வாழ்த்து!
இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார். அது யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. அதனால் அவர் பிக்பாஸ் ரசிகர்கள் அவருடைய வெளியேற்றத்தை நினைத்து வருத்தத்தில் இருக்கின்றனர். அவர் வெளியே வந்து முதன்முறையாக ஜக்கி பெர்ரி உடன் இணைந்து வீடியோவில் பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் பலர் தாமரை வெளியேறியது வருத்தமாக இருப்பதாக கமெண்ட் செய்து இருக்கிறது.
அதில் அமீர் அம்மா பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன் என சொல்லி இருக்கிறார். நான் காட்டிய பாசம் நடிப்பு என பேசுகிறார்கள் அதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்கள் நடிப்பதால் தான் நான் பாசமாக இருப்பது நடிப்பதாக தெரிவதாக சொல்லி இருக்கிறார். யாரும் வருத்தப்படாதீங்க நான் இத்தனை நாள் இருந்ததே பெரிய விஷயம் அதனால் யாரும் வருத்தப்படாதீங்க என சொல்லி இருக்கிறார். மேலும் பலர் சினிமாவில் நடிக்க வேண்டும் என சொல்ல, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என சொல்கிறார்.
“நிரூப் இல்லையென்றால் தாமரை வெளியேறி இருக்க மாட்டார்” – பிக் பாஸ் தாமரையின் கணவர் ஓபன் டாக்!
பின் என் அம்மா பெயரை பற்றி ஐக்கியிடம் கேட்க எனக்கு தெரியாது என சொல்கிறார். அது எப்படி நீ தெரியாது என நீ சொல்வாய் என கேட்க, தெரியாது என்றாலும் தெரியாது என்று சொல்ல கூடாது என சொல்கிறார். அப்படி நான் சொன்னதுக்கு தான் என்னை இப்படி பேசுறாங்க என கேட்கிறார். நான் என்ன சொன்னலும் நடிப்பு என சொல்வது வருத்தமாக இருக்கிறது. உண்மையாகவே என்னால் இந்த விளையாட்டு தெரியவில்லை என சொல்கிறார்.