TNPSC காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஜன.11 போட்டித்தேர்வு!
தமிழகத்தில் நேற்று (ஜன.9) நடைபெறவிருந்த TNPSC போட்டித் தேர்வு முழு ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நாளை (ஜன.11) நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் அரசுத்துறை பணியிடங்களுக்கு நடத்தப்படும் TNPSC போட்டித் தேர்வுகள் கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக நடைபெறவில்லை. திட்டமிடப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு பணி வாங்க வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு தயாராகி வந்தவர்கள் TNPSC தேர்வு அறிவிப்பு குறித்து எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 டிசம்பர் மாதம் TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியானது. மேலும் புள்ளியியல் சார்நிலை பணிகளுக்கான தேர்வு மற்றும் கட்டிடக்கலை, திட்ட உதவியாளர் பணிக்கான தேர்வுகளை நடத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியானது.
தமிழகம் முதல் ராஜஸ்தான் வரை – பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட மாநிலங்களின் முழு பட்டியல்!
இந்த நிலையில் தேர்வு நடைபெறும் நாளான நாளை (ஜன.9) தமிழகத்தில் கொரோனா நோய் தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. அன்றைய தினம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த சூழலில் தேர்வு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த சூழலில் அரசு TNPSC தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு ஊரடங்கு அன்று அனுமதி அளித்தது. தேர்வுகள் அனுமதி சீட்டை காண்பித்து பயணம் செய்யலாம் என்று தெரிவித்தது.
ரயில் பயணிகளுக்கு ஷாக் – டிக்கெட் விலை ரூ.10 அதிகரிப்பு! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
தேர்வு திட்டமிட்ட படி நடைபெறும் என்றும் TNPSC தேர்வாணையம் தெரிவித்தது. ஆனால் 09.01.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜனவரி 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி தேர்வு நாளை நடைபெற உள்ளது. மேலும் தேர்வுக்காக ஏற்கனவே பதிவிறக்கம் செய்த நுழைவுச் சீட்டை பயன்படுத்தி தேர்வு எழுதலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்தது.