“நிரூப் இல்லையென்றால் தாமரை வெளியேறி இருக்க மாட்டார்” – பிக் பாஸ் தாமரையின் கணவர் ஓபன் டாக்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் இருந்து நேற்று தாமரை வெளியேற்றப்பட்ட நிலையில், அது குறித்து அவரது கணவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
பிக்பாஸ் தாமரை:
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியாகும். தமிழில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 4 சீசன்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும், மாடல்களும் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த சீசனில் முதன்முறையாக நாட்டுப்புற கலைஞரான தாமரை செல்வி களமிறங்கினார்.
விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ரசிகர்கள் உற்சாகம்!
சாதாரண குடும்பத்தில் வந்து ஒரு டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சாதாரண விஷயம் இல்லை. அவர் போட்டியில் வந்த உடனே மக்கள் கவனம் அவர் மீது திரும்பியது. அவரும் தன்னுடைய நேர்மையான விளையாட்டால் பல ரசிகர்களை கவர்ந்தார். வாரந்தோறும் அவரை நாமினேட் செய்யப்பட்டு, தற்போது இறுதி வாரத்திற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அவர் யாரும் எதிர்பாராத வகையில் வெளியேறினார்
கர்ப்பமாக இருக்கும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!
அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருடைய எலிமினேஷன் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தாமரையின் கணவர் பார்த்தசாரதி கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெற்றி பெறாமல் வந்தாலும், வெளியே அவர் வெற்றி பெற்றது போலவே வரவேற்பு கிடைத்தது. அதனால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நிரூப் இரண்டாவதாக இறுதி சுற்றிற்கு போகாமல் இருந்தால் தாமரை வெளியேறி இருக்க மாட்டார். ஆனால் தாமரை இதுவரை வந்ததே சந்தோசம் என பேசி இருக்கிறார். மேலும் பைனலுக்கு வந்தால் மூத்த மகன் வருவான் சப்ரைஸ் செய்ய இருந்ததாக அவர் வருத்தப்பட்டு பேசியுள்ளார்.