IPL வரலாற்றில் ‘தல’ தோனியின் புதிய சாதனை – வியக்கும் ரசிகர்கள்!
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கி உள்ள நிலையில் சிஎஸ்கே வீரர் தோனி ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
புதிய சாதனை:
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. தற்போது 17வது ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடந்து வருகிறது.போட்டியின் முதல் நாளான நேற்று கண்கவரும் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கிடையே முதல் போட்டி சென்னையில் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
இப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி வாகை சூடியது. குறிப்பிடத்தக்க வகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் அவுட் செய்த வீரர் என்ற பெருமையை 24 ரன் அவுட்களை செய்த எம்.எஸ். தோனி பெற்றுள்ளார். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஜடேஜா 23, விராட் கோலி 19, மணிஷ் பாண்டே மற்றும் ரெய்னா தலா 16 ரன் அவுட்கள் செய்துள்ளனர்.