தமிழகத்தில் இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – பொதுமக்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்
தமிழகத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 25 ஆம் தேதி விடுமுறை ஆகும். அது மட்டுமில்லாமல் இன்று (மார்ச் 23) சனிக்கிழமை, நாளை (மார்ச் 24) ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை ஆகும். அதனால் மக்கள் பலர் வெளி ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். எனவே தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.
ரேஷன் கடைகளில் UPI பேமெண்ட் இருக்கா? இல்லையா? – பயனர்கள் குழப்பம்!
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், ரயில் எண் 06011 தாம்பரம் – நாகர்கோவில் 25 ஆம் தேதியும், ரயில் எண் 06012 நாகர்கோவில் – தாம்பரம் 24 ஆம் தேதி மற்றும் 31 ஆம் தேதியும், ரயில் எண்: 06019 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 24 ஆம் தேதியும், ரயில் எண் 06020 சென்னை – சென்ட்ரல் – நாகர்கோவில் 25 ஆம் தேதியும், ரயில் எண்: 06067 சென்னை எழும்பூர்- நாகர்கோவில் 28 ஆம் தேதியும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.