தமிழக அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். ஆனால் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பலர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.
அதனால் பல பள்ளிகளில் ஏகப்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வந்தது. இந்த ஆண்டு கட்டாயம் தேர்வு நடைபெறும் எனவும் அதற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்ப பதிவு முடிவடைந்துள்ளது. மேலும் பாடத்திட்டங்களும் வெளியாகி இருப்பதால் தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வு சிறுபான்மை பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு இல்லை என்பதால் பல முறைகேடுகள் நடைபெறுகிறது.
Exams Daily Mobile App Download
எனவே இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பள்ளி ஆசிரியர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இது குறித்து விசாரணை செய்த நீதிமன்றம், சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி கட்டாயம் கிடையாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதன்படி இனி சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் (பணி நிரந்தரம் ஆகாதவர்கள்) ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் இல்லை என நீதிமன்றம் அறிவித்துள்ளது.