தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனியார் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் பாக்கி கட்டணம் கொடுக்காததால் ஹால் டிக்கெட் தர முடியாது என்று தனியார் பள்ளிகள் தெரிவித்து உள்ளன. அதனால் பள்ளிக் கல்வித்துறை அவ்வாறு தெரிவித்த தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலமாகவே தங்களது வகுப்புகளை நடத்தி வந்தது. மேலும் மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கவனித்து வந்தனர். இந்நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த காரணத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் கூறப்பட்டு இருந்தது. மேலும் தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
PM கிசான் திட்டத்தில் கணக்கு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான தேதிகளும் தெரிவிக்கப்பட்டு மாணவர்களும் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் எனவும், அதற்கான செய்முறை தேர்வுகள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் தொடங்கி இன்று நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 10 ஆம் தேதியில் இருந்து 30 வரை நடைபெற உள்ளது. 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியிலும், 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தாக 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் குறித்த தேதிகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மே மாதம் இறுதி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தேர்வுகள் முடிந்த பிறகு விடுமுறையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தமிழகத்தில் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அதிலும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களில் ஒரு சிலர் கல்வி கட்டணங்களை பாக்கி வைத்து உள்ளனர். அதனால் இந்த பள்ளிகளில் பாக்கி பணத்தை காட்டினால் மட்டுமே ஹால் டிக்கெட் தரப்படும் என்று தெரிவித்து உள்ளனர். அதனால் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கல்வி அலுவலகங்களில் சென்று புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். இதில் அரசு தேர்வுத் துறையில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். இதில் புகார் இருந்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளனர்.