இந்தியாவின் பௌலிங்கை சமாளிக்குமா தென் ஆப்பிரிக்கா? டெஸ்ட் தொடர்! ரசிகர்கள் உற்சாகம்!
உலக கிரிக்கெட் கோப்பை டெஸ்ட் தொடர் போட்டிகள் நடந்து கொண்டு வருகிற நிலையில் IND vs SA இடையிலான டெஸ்ட் போட்டிகள் தொடங்கவிருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன்கள் இந்திய பௌலர்களின் பந்துவீச்சை சமாளிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்திய பௌலிங் யூனிட்:
கடந்த 3-4 ஆண்டுகளாக இந்தியாவின் டெஸ்ட் பௌலர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்திய பௌலிங் யூனிட்டில் வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்களும் தங்களது பங்களிப்பை தொடர்ந்து நன்றாக கொடுத்து வருகிறார்கள். சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நாடுகளிலும் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்கள். தற்போது தொடங்கவிருக்கும் IND vs SA டெஸ்ட் தொடரிலும் இந்திய பௌலர்கள் அதிக பங்களிப்பை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 பொங்கல் பரிசு? உறுதியாகும் அறிவிப்பு!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய பௌலர்கள் ஆன அஸ்வின், உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா,இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகியோர் உலக டெஸ்ட் விக்கெட் டேக்கர் பட்டியலில் உள்ளனர். அதில் அஸ்வின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி தரவரிசையில் டாப் இடத்தில் உள்ளார். அஸ்வினின் பந்துவீச்சு இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது. தற்போது இந்திய அணியின் டெத் பௌலிங்கை தென் ஆப்பிரிக்கா அணி எதிர்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
உலக டெஸ்ட் போட்டி தரவரிசையில் 6வது இடத்திலுள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதலிடத்தில் உள்ள இந்திய அணியுடன் மோத உள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் சிறந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாத காரணத்தினால் இந்திய பௌலிங்கை தற்போது வளர்ந்து வரும் வீரர்கள் சமாளிப்பார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் தெரியவரும். தற்போது டெஸ்ட் சீரிஸை வெல்ல இரு அணிகளும் பலத்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.