தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000 பொங்கல் பரிசு? உறுதியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் முழுக்கரும்பு உட்பட 21 வகையான பொருட்கள் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதனுடன் ரொக்கத் தொகையும் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கூட்டுறவு துறை சங்கங்களின் பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
ரொக்கத்தொகை ரூ.1000 அல்லது ரூ.2000?
தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 2022ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி விநியோகிக்கப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை, நெய், முழுக்கரும்பு ஆகியவை பரிசுத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
அதில் பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில் 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1088,17,70,300 செலவில் வழங்க உள்ளதாக ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்த ரொக்க பணம் பொங்கல் பரிசுத்தொகுப்பில் இடம்பெறவில்லை. ஏனென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகை 2500 ரூபாய் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் கொரோனா நிவாரண உதவி தொகையாக 4000 ரூபாய் முதல்வர் தமிழக மக்களுக்கு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் இடம் பெறாமல் இருப்பது குறித்த சர்ச்சை சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தற்போது கட்டுப்பாட்டு அறை அமைத்தல் என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ள குறிப்பில் இதற்கென துணைப்பதிவாளர் நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவரை நியமித்து பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை ரேஷன் கடை மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு பணம் வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்னும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் ரூ.1000 அல்லது ரூ.2000 வழங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மக்களும் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர்.