தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வருகிற 27 ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பல்வேறு இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. தற்போது தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று முதல் இன்னும் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அத்துடன் வருகிற 27ஆம் தேதி அன்று கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் 27 ஆம் தேதி வரையிலான வானிலை நிலவரத்தை சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
23.12.2021 முதல் 26.12.2021 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
டிச.30 முதல் ஜன.2 வரை 144 தடை உத்தரவு அமல் – ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி!
27.12.2021: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை எச்சரிக்கை:
23.12.2021, 24.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை