தமிழகத்தில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறைகள் பங்கேற்கவுள்ளனர்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். கொரோனா பரவலுக்கு முன்பு அனைத்து மாவட்டங்களிலும் தனியார் துறை வேலைவாய்ப்புகள் நடைபெறும். இடையில் கொரோனா தாக்கத்தால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. தற்போது அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பற்றோர்க்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் தனியார் துறைகள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி நேர்காணல் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (24.12.2021) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. 8ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றவர்கள் முதல் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்கலாம். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டிச.30 முதல் ஜன.2 வரை 144 தடை உத்தரவு அமல் – ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி!
இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரக்குறிப்பு மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் முகாமில் நேரில் கலந்து கொண்டு நாளை நடைபெறும் முகாம் மூலம் வேலைவாய்ப்பை பெறலாம் என்றும் வேலை நாடுநர்கள் இதனை பயன்படுத்தி பயன் பெறலாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.