தமிழகத்தில் மாவட்ட பதிவாளர் அதிகாரம் நிறுத்தம் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் மாவட்ட பதிவாளர் அதிகாரம் நிறுத்தம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பத்திரப்பதிவுத் துறையில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெறுவதால் மாவட்ட பதிவாளர் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிய சட்டத்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அதன் படி ஆள்மாறாட்டம், போலி ஆவணம், முறைகேடாக பதியப்பட்ட பத்திரப்பதிவுகளை அந்தந்த மாவட்ட பதிவாளர் விசாரணை செய்து ரத்து செய்யலாம் என சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மாவட்ட பதிவாளர்கள் முறையாக விசாரணை செய்யாமல் பாத்திரங்களை ரத்து செய்வதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் பிழை – கருணை மதிப்பெண் கேட்டு கோரிக்கை!

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பத்திரப்பதிவு ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் தமிழ்நாடுஅரசின் சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 4 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!