10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வினாத்தாளில் அச்சுப்பிழை ஏற்பட்டுள்ளதால் கருணை மதிப்பெண் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கருணை மதிப்பெண்:
தமிழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொது தேர்வு முடிந்ததை தொடர்ந்து நேற்று 10ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இத்தேர்வுக்கென 9.26 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில் 17,663 பேர் தேர்வில் கலந்து கொள்ளாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு குறித்து மாணவர்கள் கூறுகையில் எளிதாக இருந்தது என்றும் இரண்டு மதிப்பெண் கேள்விகள் சற்று வித்தியாசமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 30ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 7 வது ஊதியக்குழு தகவல்!
இருப்பினும் அச்சு பிழை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 33 வது கேள்வியில் அச்சு பிழை காணப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சற்று குழப்பம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிள்ளையுடன் இருந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கருணை மதிப்பெண் வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.