மார்ச் 30ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் – 7 வது ஊதியக்குழு தகவல்!

0
மார்ச் 30ம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட் - 7 வது ஊதியக்குழு தகவல்!

மத்திய அரசின் ஊழியர்களுக்கு வர இருக்கும் மார்ச் 30ம் தேதி அன்று மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையிலான ஒரு முக்கிய பரிசு கிடைக்க காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஊதியக் குழு:

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தொழில் துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் தான் அகவிலைப்படி ஆனது கணக்கிடப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஜனவரி முதல் ஜூன் மாதங்களுக்கான அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

GIRHFWT திண்டுக்கல் நிறுவனத்தில் ரூ.62,000/- சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

அறிவிப்பின்படி அரசு ஊழியர்கள் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை ஜனவரி முன் முதல் முன் தேதியிட்டு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊழியர்களின் அகவிலைப்படி ஆனது 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான ஊதியம் ஊழியர்களுக்கு மார்ச் 30ஆம் தேதி அன்று கிடைக்க உள்ளது. இதனுடன் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் நிலுவைத் தொகையும் சேர்த்து ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!