தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு 2 மாத சம்பளம் தராமல் இழுத்தடிப்பு – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதமும் சம்பளம் வழங்கப்படாமல் இருக்கும் நிலையில் உடனடியாக இரண்டு மாத சம்பளமும் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக ஆசிரியர்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கான காலிப் பணியிடங்கள் அனைத்தும் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்பட்டது. மேலும், இந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு மாத சம்பளமாக ரூபாய் 15,000 வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு அவ்வப்போது மாதச் சம்பளம் தாமதமாக வழங்குவதாகவும், மாத சம்பளம் தராமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் ஆசிரியர்கள் முறையிட்டிருந்தனர்.
Post Office சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதம் இவ்வளவா? முழு விவரம் இதோ!
அதாவது, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தற்காலிக ஆசிரியர்களுக்கு பல மாவட்டங்களில் சம்பளம் வழங்கப்படவில்லை என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், வரும் ஜூன் ஏழாம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட இருக்கும் நிலையில் உடனடியாக தற்காலிக ஆசிரியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.