Post Office சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதம் இவ்வளவா? முழு விவரம் இதோ!
வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் வழங்கும் எண்ணற்ற சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதன் சிறப்பு என்னையெனில் வட்டி விகிதங்கள் அதிக அளவில் உள்ளது. இப்பதிவில் அதிக வட்டி தரும் சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
சேமிப்பு திட்டங்கள்:
இன்றைக்கு மக்கள் பாதுகாப்பான மற்றும் அதிக தரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் மற்றும் அஞ்சலங்கள் சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரா சேமிப்பு திட்டம் நிலையான வைப்பு தொகை திட்டத்தை விட அதிக வட்டியை அளிக்கிறது. இதில் செலுத்தப்படும் முதலீட்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – பெட்ரோல், டீசலின் விலை பட்டியல் வெளியீடு!
அதே போல அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் 5 வருட முதிர்வு காலத்துடன் 7.7% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தாக சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் இத்திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கப்படும். இதில் தற்போது வட்டி விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 8% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் வரி விலக்கு சலுகையும் உண்டு.