தமிழகத்தில் பள்ளி விடுமுறை நீட்டிப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!
தமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை:
தமிழக பள்ளிகளில் கோடை விடுமுறைக்கு பிறகு 2023 – 2024 ம் கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 1 ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. இது குறித்து ஆலோசிக்கப்பட்டு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. அதாவது ஜூன் 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கு 2 மாத சம்பளம் தராமல் இழுத்தடிப்பு – முக்கிய கோரிக்கை!
இந்த நிலையில் தற்போது வரை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் கோடை விடுமுறையானது மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 – 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியில் 6 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.