தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கம்!

0
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் - சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கம்!

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நியமிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு சர்ச்சைகள் வெளியானது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

ஆசிரியர் பணியிடங்கள்:

தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2021 – 2022 ம் கல்வியாண்டு முதலே மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. இந்த மாணவர்களின் சேர்க்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால் ஒரே ஆசிரியரே அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. மேலும் கற்பித்தலிலும் தொய்வு ஏற்பட்டது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து மேலும் இப்பணியிடங்கள் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த வருடங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் வழங்கப்படாமல் உள்ள நிலையில் தற்போது தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்படுவது நியாயமற்றது என்று விமர்சனங்கள் எழுந்தது.

தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் – அரசாணை வெளியீடு!

பல குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்கள் நிரப்படமாட்டாது என்று கூறப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்க கூடாது என்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அத்துடன் முதல்வரின் அறிவுரைப்படியே தற்காலிக ஆசிரியர் நியமனம் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!