தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோரின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக விருப்ப ஓய்வு பெறுவோருக்கு புதிய வெயிட்டேஜ் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு:
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் 56 வயதில் ஒருவர் விருப்ப ஓய்வு பெற்றால் அவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். இந்நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் படி ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கு 58 வயது ஓய்வு பெறும் வயதாக இருக்கும் போது 54 வயது அல்லது அதற்கு குறைவான வயதில் ஒருவர் விருப்பு ஓய்வு பெற்றால் அவர்களுக்கு கூடுதலாக 5 ஆண்டு பணியாற்றியதாக ‘வெயிட்டேஜ்’ கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் இப்போது 60 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதால் 56 அல்லது அதற்கு கீழ் இருப்பவர்கள் ஓய்வு பெற விரும்பினால் அவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு வெயிட்டேஜ் வழங்கப்படும்.
அந்த வகையில் 60 ஆண்டாக கணக்கீட்டு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும். அதேபோல் 57 வயதில் விருப்ப ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகளும், 59 வயதில் விருப்ப ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும் என தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.