அக்.3 வரை வழிபாட்டு தலங்கள் மூடல், புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்ற போதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகளின் கீழ், பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், சினிமா அரங்குகள், சுற்றுலா தளங்கள் உட்பட அனைத்து வகையான வணிக தளங்களும் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. என்றாலும் மத வழிபாட்டு தலங்கள் மட்டும் வார இறுதி நாட்களில் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – தகுதி, நேரம், கற்றல் திறன் விளக்கம்!
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டம் பூண்டி பூங்காக்கள், நீச்சல் குளங்கள் மற்றும் அணைகள் உட்பட பொது மக்கள் கூடும் அனைத்து இடங்களும் அக்டோபர் 3ம் தேதி வரை மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீக்கடைகள் அனைத்தும் தினசரி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் விநியோக சேவைகள் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். குறிப்பாக சாலையோர உணவகங்கள் மற்றும் சிறு வியாபார கடைகள் உட்பட அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம்.
தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காந்தி ஜெயந்தி போட்டிகள்!
ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் 50% மக்கள் மட்டுமே கூட அனுமதிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயமாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் அரசு பேருந்துகள் 50% பயணிகளுடன் தொடர்ந்து இயக்கப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.