TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – தகுதி, நேரம், கற்றல் திறன் விளக்கம்!

5
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு - தகுதி, நேரம், கற்றல் திறன் விளக்கம்!
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு - தகுதி, நேரம், கற்றல் திறன் விளக்கம்!
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – தகுதி, நேரம், கற்றல் திறன் விளக்கம்!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், இளைஞர்கள் மத்தியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் ‘TCS iON Career Edge’ என்ற பயிற்சி திட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த பயிற்சி தொடர்பான முழு விவரங்களும் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பயிற்சி திட்டம்

உலகளவில் உருவாக்கப்பட்டு வரும் தொழில்நுட்ப சேவைகளில் சுமார் 15% வழங்கி வரும் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப சேவை வழங்குநரான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் ‘TCS iON Career Edge’ என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்த திட்டம், ஒரு இலவச 15 நாள் தொழில் தயார்படுத்தல் குறித்த பயிற்சியை மையமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இன்றைய காலத்து இளைஞர்கள் எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொளவதற்கான முக்கிய திறன்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – காந்தி ஜெயந்தி போட்டிகள்!

இந்த வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் தவிர, புதிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளையும் வழங்குவதற்கு இந்நிறுவனம் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. இப்போது ‘TCS iON Career Edge’ திட்டத்தின் முழு விளக்கங்களும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

பயிற்சி காலம்:

  • 2 வாரங்கள் ஆகும்.
  • விண்ணப்பதாரர்கள் வாரத்திற்கு குறைந்தது 7 முதல் 10 மணிநேரம் வரை செலவழிக்க வேண்டும்.
  • பாடத்தின் மொழி ஆங்கிலத்தில் இருக்கும்.
  • பயிற்சி வடிவம் ஆன்லைன் மற்றும் நேரடி முறையில் இருக்கும்.

தகுதி:

இளங்கலை பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் மற்றும் புதியவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி திட்டம்:

இந்த பயிற்சி, தகவல் தொடர்பு திறன்கள் மற்றும் கணக்கியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என 14 தொகுதிகளில் வழங்கப்படுகிறது. மேலும் வீடியோக்கள், விளக்க காட்சிகள், வாசிப்புப் பொருட்கள், TCS நிபுணர்களால் பதிவு செய்யப்பட்ட வெபினார்கள் மற்றும் தொகுதிக்கான சுய-மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் 1 முதல் 2 மணிநேரம் வரை ஒவ்வொரு தொகுதியும் நடத்தப்பட இருக்கிறது. பயிற்சியின் இறுதிக்கட்டமாக கற்பவர்களின் புரிதல்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதனுடன் சான்றிதழ்களும் கொடுக்கப்பட இருக்கிறது.

கற்றல் திறன்:

  • பணியிடங்களில் நட்புறவை உருவாக்குவதற்கான நடத்தை திறன்கள்.
  • பணியில் ஒரு தாக்கத்தை உருவாக்க விளக்கக்காட்சி மற்றும் தொடர்பு திறன்.
  • வலுவான சுயவிவரத் தெரிவுநிலை உருவாக்கம்.
  • கார்ப்பரேட் அமைப்பில் பொருத்தமான வணிக அறிவு.
  • கணக்கியல் மற்றும் IT சேவைகளின் அடிப்படைகள்.
  • செயற்கை நுண்ணறிவின் கருத்து ஆகியவை கற்றுக் கொடுக்கப்பட இருக்கிறது.\

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!