தமிழகத்தில் உள்ள கோவில்களில் இனி தமிழில் அர்ச்சனை – அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!
தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் நடப்பு ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் அமைத்துள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தமிழகத்தில் பல சிறப்பு மற்றும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் பல்வேறு துறைகளிலும் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மகளிர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் போன்ற பல திட்டங்களை அறிவித்துள்ளது.
தமிழக மருத்துவ பணியாளர்கள் பணியிட மாறுதல் – அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!
பொதுவாக இந்து மத கோவில்களில் கடவுள்களுக்கு சம்ஸ்கிருத மொழியில் தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆதிமொழியான தமிழில் தான் கோவில்களில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழகத்தில் கோரிக்கைகள் இருந்து வந்தது. இருப்பினும் பல தரப்புகளில் இருந்தும் இந்த கருத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு அவர்கள் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியுள்ளார். அதன்படி, தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும். இதற்கான அறிவிப்பு பலகை கோவில்களில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர், கைபேசி எண் போன்றவையும் அறிவிப்பு பலகையில் இடம் பெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அருமையான பதிவு