தமிழக மருத்துவ பணியாளர்கள் பணியிட மாறுதல் – அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு!
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணியிட மாற்றம் வேண்டி அமைச்சர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பணியிட மாற்றம்
தமிழகத்தில் அரசு பணியாளர்கள் பணி செய்யும் இடம் கலந்தாய்வில் மூலம் தெரிவு செய்யப்படுகிறது. சில நேரங்களில் அரசு பணியாளர்களுக்கு அவர்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து வெகு தொலைவில் அமைந்து விடுகிறது. ஒரு சிலருக்கு வேறு மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதை விரும்பாதவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து பணி இட மாற்றம் கோரி விண்ணப்பிப்பர்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2021 – கால அட்டவணை வெளியீடு!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளாகும். டாக்டர்கள் பணியிட மாற்றம், செவிலியர்கள் பணியிட மாற்றம், மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் பணியிட மாற்றம் போன்ற காரணங்களுக்காக தினசரி பலர் தலைமை செயலகத்துக்கு வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இவர்களின் வருகையை தடுப்பதற்காக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறையின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்களின் பணியிட மாறுதல் அனைத்தும் வெளிப்படையான கலந்தாய்வின் வாயிலாக நடைபெறுவதால் பணியிட மாறுதல் தொடர்பாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அலுவலகத்தை அணுக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.