தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தென் தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் அறிக்கை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வட தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரி முதல் 104 டிகிரியும் காணப்பட்டது.
தேர்தலை முன்னிட்டு பேட்டா இரு மடங்கு உயர்வு – வேட்பாளர்கள் அதிர்ச்சி!
அதிகபட்சமாக ஈரோடு, திருச்சி, வேலூர் பகுதிகளில் 106 டிகிரியும், சேலம், தர்மபுரி, மதுரை விமான நிலையம், நாமக்கல் 104 டிகிரியும், கோவை 102 டிகிரி, தஞ்சாவூர், திருப்பத்தூர், தொண்டி, சென்னை மீனம்பாக்கத்தில் 100 டிகிரி இருந்தது. இந்நிலையில், அதிகபட்ச வெப்பநிலை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை தென் தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.