தேர்தலை முன்னிட்டு பேட்டா இரு மடங்கு உயர்வு – வேட்பாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடி உள்ளதால் வேட்பாளர்கள் தங்களின் தொண்டர்களுக்கும் இரு மடங்கு பேட்டா வழங்க உள்ளதால், மூன்று நாட்களுக்கு மட்டும் 21 கோடி ரூபாய் செலவிடும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பேட்டா இரு மடங்கு உயர்வு:
- தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து பிரச்சாரங்களும் நேற்று மாலை 6:00 மணியுடன் ஓய்வடைந்தன.
- இந்த பிரச்சாரத்தில் பல்வேறு தொண்டர்கள் இணைந்து தலைவர்கள் வீதியில் இறங்கி வாக்கு சேகரித்தனர்.
- இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் மட்டுமின்றி கட்சி தொண்டர்களையும் பிரச்சாரத்திற்கு அழைத்து சென்றனர்.
- அவர்கள் தினசரி 200 முதல் 300 பேருடன் இருசக்கர வாகனங்களில் உலா வந்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
- அவர்களுக்கு தினசரி பெட்ரோல், பிரியாணி, குவாட்டர் என வழங்கப்பட்டது.
- அதாவது குவாட்டருக்கு 150 ரூபாய் பெட்ரோல் 150 என தினசரி 300 ரூபாயும் மதியம் சிக்கன் பிரியாணி பொட்டலமும் வழங்கினர்.
JIOவின் கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விவரம் இதோ!
- 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கள்ளச்சந்தையில் மது ரூபாய் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
- இதன் காரணமாக வேட்பாளர்கள் தங்களது தொண்டர்களுக்கு 300 ரூபாய் என இரு மடங்கு டேட்டாவை உயர்த்தி தர வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.
- இப்படி செலவு செய்வதால் ஒரு தொகுதிக்கு 150 ரூபாய் வீதம் 6000 பேருக்கு 9 லட்சம் வரை டாஸ்மாக் மதுவுக்கு செலவிடப்படுகிறது.
- மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு லோக்சபா தொகுதிக்கும் 50 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.
- இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு தலா 54 லட்சம் என கணக்கிடும் போது 21 கோடி 6 லட்சம் தோராயமாக மதுவுக்காக செலவிடப்படும் என அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.