மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பணியாற்ற ஆசிரியர்கள் தேவை – விண்ணப்பிக்க ஜூலை 18 கடைசி நாள்!
மதுரை எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தற்போது ராமநாதபுரம் அரசு கல்லூரியில் எம்பிபிஎஸ்க்கான வகுப்புகளை பயின்று வருகின்றனர். இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றுவதற்காக ஆசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை:
மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கட்டுமான பணிகள் 45 மாதங்களில் நிறைவடைந்து எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகியும் சுற்றுசுவர் மட்டுமே எழுப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரிகள் செயல்படத் தொடங்கிவிட்டது.
Exams Daily Mobile App Download
இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கல்லூரிகளை குறைந்தபட்சம் தற்காலிக கட்டிடங்களிளாவது தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. அதன்படி எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் வகுப்புகள் தற்காலிகமாக தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டபோது முதற்கட்டமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு 50 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
WhatsApp பயனர்களுக்கு ஷாக் தகவல் – இனி 16 லட்சம் பேர் பயன்படுத்த முடியாது!
தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணியாற்ற 94 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இருப்பதால் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ENT, General surgery, anatomy உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவை என்பதால் விருப்பமும் தகுதியும் உள்ள ஆசிரியர்கள் www.jipmer.edu.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 18 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.