TCS நிறுவனம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டம்!

0
TCS நிறுவனம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் - 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டம்!
TCS நிறுவனம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் - 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டம்!
TCS நிறுவனம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ் – 40,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்த திட்டம்!

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS 2024ம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் மனித வள நிர்வாகி தகவல் தெரிவித்துள்ள்ளார்.

பணி நியமனம்:

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் ஐடி துறைகளில் ஊழியர்கள் பணி நீக்கம் அதிக அளவில் நிகழ்ந்தது. ஏனெனில் கடந்த ஆண்டில் நிலவிய பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட தேவையின் காரணமாக நியமிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் போன்ற காரணங்களால் மெட்டா, டிவிட்டர், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

புதுச்சேரியிலும் உயர இருக்கும் மின் கட்டணம் – அவதியில் பொதுமக்கள்!!

Follow our Instagram for more Latest Updates

மற்ற நிறுவனங்களை தொடர்ந்து ஐடி துறையில் முன்னணியில் உள்ள TCS நிறுவனமும் தங்களின் ஊழியர்களை திடீரென பணி நீக்கம் செய்தது. நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது TCS நிறுவனத்தில் 2,197 பேர் குறைவாக உள்ளனர். இந்த நிலையில் TCS வெளியிட்ட அறிவிப்பில் 2024ம் ஆண்டு முதல் காலாண்டில் 35,000 பேரை நியமிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அடுத்ததாக 3ம் காலாண்டில் 7,000 பேர் என மொத்தம் 42,000 ஊழியர்கள் புதிதாக பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 4-ம் காலாண்டில் மேலும் புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அந்நிறுவனத்தின் மனித வள நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!