புதுச்சேரியிலும் உயர இருக்கும் மின் கட்டணம் – அவதியில் பொதுமக்கள்!!
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்ததை தொடர்ந்து, புதுச்சேரியிலும் மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பார்ப்போம்.
மின் கட்டணம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது புதுச்சேரியிலும் மின் கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்தியில் மின் கட்டணம் உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜன. 12 தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – முன்னெச்சரிக்கை அவசியம்!
Follow our Instagram for more Latest Updates
அதன்படி தற்போது 1 முதல் 100 யூனிட் வரையிலான கட்டணம் ரூ.1.90 காசுகளாக வசூலிக்கப்படுகிறது. இதனை ரூ.2.30 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து 101 முதல் 200 யூனிட் வரை ரூ.2.90 ஆக இருப்பதை ரூ.3.30 ஆக உயர்த்த உள்ளது. இதே போல் 201 முதல் 300 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.5 லிருந்து ரூ.5.45 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் 1 முதல் 100 யூனிட் வரை ரூ.5.70க்கு பதிலாக ரூ.6 ஆக அதிகரிக்க உள்ளதாகவும், அத்துடன் 101 முதல் 250 யூனிட் வரை ரூ.6.75க்கு பதிலாக ரூ.6.85 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, 251 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ.7.50க்கு பதிலாக ரூ.7.60 வசூலிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.