தேசிய தகுதித் தேர்வு (NQT) மூலம் புதிய பணியமர்த்தலைத் தொடங்கியுள்ளதாக TCS நிறுவனம் ஏற்கனவே அறிவித்த நிலையில் தற்போது இதன் மூலம் 10,000 க்கும் மேற்பட்ட புதியவர்களை பணியமர்த்த உள்ளது.
TCS NQT:
தேசிய தகுதித் தேர்வு (NQT) மூலம் புதிய பணியமர்த்தலைத் தொடங்கியுள்ளதாக நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது, இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10 என முன்னதாக தெரிவித்திருந்தது. இதற்கான தேர்வுகள் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மூன்று பிரிவுகளுக்கு பணியமர்த்தப்படுவதாகவும், அவர்களுக்கு ஆண்டுக்கு ₹3.36 லட்சம் முதல் ₹9-11.5 லட்சம் சம்பளம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வேலை உங்கள் கனவா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!
TCS நிறுவனத்தில் VIT மாணவர்கள் 963 வேலை ஒப்பந்தங்களை பெற்றனர், அதில் 103 முக்கிய தர வகையைச் சேர்ந்தது. இதற்கிடையில், S Vaidhyasubramaniam, SASTRA பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், கல்லூரியின் 1,300 மாணவர்கள் 2,000 வேலை ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.