மூன்லைட்டிங் பஞ்சாயத்துக்கு நடுவே சத்தமே இல்லாமல் TCS நிறுவனம் செய்த வேலை – நிறுவனத்தின் புதிய திட்டம்!
ஐடி நிறுவன ஊழியர்கள் தாங்கள் முழு நேரமாக பணியாற்றும் நிறுவனத்தை ஏமாற்றி மற்ற நிறுவனங்களில் பணிபுரிவதை தவிர்ப்பதற்காக முன்னணி ஐடி நிறுவனம் புதிய உத்தியை கையாள உள்ளது.
புதிய திட்டங்கள்:
சில மாதங்களாக இந்தியாவின் ஐடி நிறுவனங்களில் அதிக விவாதத்திற்கு உள்ளான மூன்லைட்டிங் முறை குறித்து முன்னணி நிறுவனங்கள் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. ஒரு சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் தங்களின் பணி நேரம் தவிர மற்ற நேரங்களில் மற்ற நிறுவனங்களுக்கு பணி செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆனால் பல முக்கிய தகவல்களை கையாளும் ஐடி திரையில் இது சாத்தியமில்லை என்று நிபுணர்களும் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மிலிந்த் லக்காட், தங்கள் நிறுவன ஊழியர்கள் மற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதை தவிர்க்கும் வகையில், புதிய திட்டங்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், இதில் பணியாற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த திட்டங்களில் சேர்ந்து பணியாற்றலாம் என்றும், தற்காலிக பணியாளர்களாக அவர்களை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குஷியில் தமிழக ஊழியர்கள்.. இரட்டிப்பாகும் தீபாவளி முன்பணம்.. அரசின் சூப்பர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும், வீட்டில் இருந்து வேலை செய்வதால் தான் தற்போது மூன்லைட்டிங் முறையில் செயல்பட முடிகிறது. ஆனால், மீண்டும் ஊழியர்கள் படிப்படியாக அலுவலகத்திற்கு திரும்பும் பட்சத்தில் இந்த பிரச்சனை முடிவிற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்லைட்டிங் முறையில் ஈடுபட்ட 300 ஊழியர்களை விப்ரோ அதிரடியாக வேலை நீக்கம் செய்த பிறகு தான் இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை ஊழியர்கள் உணர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்